Sunday 14 February 2016

விரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர்






























12-02-2016 அன்று மாநில  செயற்குழுவும் , 13-02-106 அன்று விரிவடைந்த மாநில செயற்குழுவும்  வேலூர் மாநகரத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாநில தலைவர் தோழர் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இரண்டு நிகழ்சிகளும் மாவட்ட, மற்றும் கிளை சங்க நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி  ஊட்டக்கூடியதாக அமைந்தது .முதல் நாள் நிகழ்ச்சியில் நமது மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார் .நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் தனது நீண்ட உரையில் நரேந்தர மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றியும் கடந்த மூன்று ஆண்டுகள் BSNL நிறுவன புத்தாக்கத்திற்கு நமது BSNLEU சங்கம் செலுத்திய பங்களிப்பையும் , Non executive ஊழியர்களுக்கு நாம் செய்துள்ள பணிகளையும் விரிவாக பேசினார் . நமது மாநில செயலர்  சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது நடந்த விவாதத்தில் அனைத்து  மாவட்ட செயலர்களும் ,மாநில சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் . 2 ஆம் நாள் நடைபெற நிகழ்ச்சியில் 30-04-2016 அன்று பணி ஓய்வு பெற உள்ள மதுரை மாவட்ட செயலர் தோழர் சூரியன் தேசிய கொடியை ஏற்றி வைக்க நமது சங்க கொடியை மாநில  சங்க நிர்வாகி தோழர்  வெங்கட்ராமன் ஏற்றி வைக்க , மாநில செயலரின் வரவேற்பு உரையுடன்  விரிவடைந்த மாநில செயற்குழு தொடங்கியது .தொடக்க உரை  நிகழ்த்திய நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் வர   உள்ள 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU  சங்கம் மிக பெரிய வெற்றியை பெறும்  என  அறிவித்த போது  கரவொலி அடங்க நீண்ட நேரமாகியது . 6 வது சரிபார்ப்பு தேர்தலில் போனஸ் , மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் LTC   ஆகியன நிறுத்தப்பட்ட விசயங்களை நமக்கு எதிரான பிரச்சாரங்களாக  மாற்றிய NFTE  சங்கம் 4 % மேற்பட்ட வாக்குகளை இழந்தது . ஆனால்  நமது BSNL ஊழியர் சங்கம் 2.8% வாக்குகளை அதிகரித்து சாதனை வெற்றி பெற்றது . தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் கையாண்டு தீர்வு செய்துள்ள பல்வேறு  பிரச்சனைகள்   மற்றும் நமது நிறுவன புத்தாக்கத்திற்கு செய்துள்ள  நிகழ்வுகள் நம்மை மிக பெரிய வெற்றியை நோக்கி செல்லும் என அறுதியிட்டு கூறினார் .மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வாரியாக கிளை செயலர்கள் பேசினர் .நமது  மாவட்ட சங்கம் சார்பாக தென்காசி கிளை செயலர் தோழர்  இராமசுப்பு ,TM  அவர்கள் பேசினார் .அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புற செய்த வேலூர் தோழர்களுக்கு நன்றி உரித்தாக்குகி

No comments:

Post a Comment