Wednesday 30 September 2015

IDA உயர்வு



IDA உயர்வு

   01-10-2015 முதல் IDA  5.3% உயர்ந்துள்ளது ஆக மொத்தம்  IDA 107.9%. ஆக இருக்கும்.

Tuesday 29 September 2015

நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை...


நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை...

அருமைத் தோழர்களே ! எதிர்வரும் 06.10.15 போனஸ் ஆர்பாட்ட  அறைகூவல் குறித்து அகில இந்திய FORUM அறிவித்துள்ளது பற்றி நமது BSNLEU தமிழ் மாநில சங்கம்  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது 



Read | Download

சுற்றறிக்கை எண்:68
தற்காலிக PLI வழங்கக் கோரி-அக்டோபர் 6ல் ஆர்ப்பாட்டம்- FORUM முடிவு

Tuesday 22 September 2015

பக்ரித்பண்டிகை விடுமுறை





பக்ரித்பண்டிகை விடுமுறை 25-09-2015 க்கு பதிலாக 24.09.2015 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மாநில நிர்வாகம் அதற்கான உத்தரவை பிறப்பித்து விட்டது .


கண்ணீர் அஞ்சலி . . .





கண்ணீர் அஞ்சலி . . .

 
கண்ணீர் அஞ்சலி . . .

  அருமைத் தோழர்களே ! அனைவராலும் அன்பாக "பெத்தேல் " என அழைக்கப்படும் அருமைத் தோழர் " D.J.J.பெத்தேல் ராஜ்" இன்று 21.09.15 மதியம் 3 மணிக்கு இயற்கை எய்தி விட்டார் என்பதை மிக, மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். K.G.போஸ் அணியை கட்டுவதில் முன்னின்ற தலைவர்களில் இவரும் ஒருவராக இருந்து தமிழகம் முழுவதும் சென்று பணியாற்றியவர்.தொழிற்சங்க செயல்பாட்டிற்காக நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு, பாண்டிச் சேரியில் இருந்து பழனிக்கு மாற்றப்பட்டார். மதுரை மாவட்டத்தில் K.G.போஸ் அணி முன்னணி படையாக வளர்வதற்கு அரும்பாடு பட்டவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருதய சிகிச்சை செய்து நலமுடன் இருந்து வந்தார். தற்போது, மீண்டும் இருதய சிகிச்சை கடந்த வாரம் சென்னையில் செய்யப்பட்டது. அதற்குப் பின் அவருக்கு இருதயம் சரியாக இயங்குவதாகவும். கிட்னி செயல்இல்லாமல் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அதன் பின் சிகிச்சை பலனின்றி தோழர். D.J.J.பெத்தேல் ராஜ்" இன்று 21.09.15 மதியம் 3 மணிக்கு இயற்கை எய்திவிட்டார். அன்னாருக்கு நமது BSNLEU திருநெல்வேலி மாவட்ட சங்கம் அஞ்சலியை உரித்தாக்குகிறது.

Sunday 20 September 2015

தர்ணா போராட்டம்


தர்ணா போராட்டம்





      நமது நிறுவனத்தின் செல் கோபுரங்களை தனியாகப் பிரித்து அதை ஒரு கம்பெனியாக அமைத்து தனியாருக்கு தாரை வார்க்க தணியாத தாகத்தோடு இருக்கிற மத்திய அரசைக்  கண்டித்து திருநெல்வேலில் GMO அலுவலகத்தில்
 தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது .

   
  
காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை ஐந்து மணிவரை நடைபெற்றது 


     சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் 19..09.2015 அன்று நடத்தப்பட்டது 

      அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது 

       அதிகாரிகளும் ஊழியர்களுமாக  சுமர் 80 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

        விண்ணை முட்டும் கோஷங்கள் வீராவேஷமாக முழங்கப்பட்டது 

        கலந்துகொண்டு சிறப்பித்த அதிகாரி களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி 







நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண் -67.

22.09.15 கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துக...






22.09.15 கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துக...

அருமைத் தோழர்களே ! 22.09.15 கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்திட நமது மாநில சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது....

Friday 18 September 2015

நமது தமிழ் மாநில BSNLEU சங்க சுற்றறிக்கை


நமது தமிழ் மாநில BSNLEU சங்க சுற்றறிக்கை 


Read | Download

சுற்றறிக்கை எண் 66
மாநிலச் செயலக கூட்டம் 18.09.2015 அன்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்

Saturday 12 September 2015

சென்னை சொசைட்டி கடனுக்கான அநியாய வட்டி விகித உயர்வை ...........






Read | Download


Read | Download

செப்டம்பர் 22-ல் ஆர்ப்பாட்டம்
சென்னை சொசைட்டி கடனுக்கான அநியாய வட்டி விகித உயர்வை வாபஸ் வாங்க கோரியும்,சொசைட்டி நிலத்தை நிலமாகவே பிரித்துத்தரக் கோரியும் செப்டம்பர் 15-ல் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்…அகில இந்திய Forumத்தின் செப்டம்பர் 16 தார்ணா போராட்டத்தை முன்னிட்டு செப்டம்பர் 22ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அனைத்து கிளைகளிலும் வலுவான ஆர்ப்பாட்டம் நடத்திடவேண்டுகிறோம்.
சென்னை சொசைட்டி கடனுக்கான அநியாய வட்டி விகித உயர்வை வாபஸ் வாங்க கோரியும்,சொசைட்டி நிலத்தை நிலமாகவே பிரித்துத்தரக் கோரியும் செப்டம்பர் 15-ல் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்…அகில இந்திய Forumத்தின் செப்டம்பர் 16 தார்ணா போராட்டத்தை முன்னிட்டு செப்டம்பர் 22ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அனைத்து கிளைகளிலும் வலுவான ஆர்ப்பாட்டம் நடத்திடவேண்டுகிறோம்.

Wednesday 9 September 2015

தனியாக டவர் நிறுவனம் அமைக்காதே-16.09.15 தார்ணா.





தனியாக டவர் நிறுவனம் அமைக்காதே-16.09.15 தார்ணா.

அருமைத் தோழர்களே ! நமது BSNLலில் தனியாக  டவர் நிறுவனம் அமைக்காதே- மத்திய அரசின் கேபினட் முடிவை ரத்து செய்யக்கோரி இந்திய நாடு முழுவதும் 16.09.15 தார்ணா நடத்துவது குறித்து நமது தமிழ் மாநில FORUM சார்பாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது . ....

Tuesday 8 September 2015

முதற்கட்டமாக JTO பயிற்சி துவங்கப்படுகிறது . . .





தோழர்களே ! நமது தமிழ் மாநிலத்தில் ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட JTO ரிசல்ட் அடிப்படையில் 
JTO Induction Training - Pre-Basic-I (21.09.15 to 09.10.15) & Pre Basic-II (12.10.15 to 30.10.15)
ஆகிய நாட்களில் சென்னை மீனம்பாக்கம் RGMTTC பயிற்சி நிலையத்தில் 28 தோழர்களுக்கும்
சென்னை மறைமலை நகர் பயிற்சி நிலையத்தில் 27 
தோழர்களுக்கும்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXggb96CCYWxeSGoDYyj492OKap_QFtMMfbWDiy6RMyGVltjA487sXDNZJa-hRetpx0gehTyc2xjcFKgabK72TWTPXmMtoDfD3BM_oUxOHwq_5Uaj6SmqXBEZR7obiJ_8cahyphenhyphenSql2kjuM/s320/Google-Adword-Training-for-Charities.jpg
முதற்கட்டமாக பயிற்சி துவங்கப்படுகிறதுபயிற்சிக்கு செல்லும் அனைத்து
தோழர்களுக்கு நமது BSNLEU   மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

Friday 4 September 2015

16.09.15 அன்று FORUM தார்ணா...




டவர் தனியாக பிரிக்கும் கேபினட் முடிவுக்கு எதிராக இந்திய நாடு முழுவதும் மத்திய,மாநில,மாவட்ட தலைநகரங்களில் 16.09.15 அன்று FORUM தார்ணா...

Massive dharnas at Corporate Office, Circle and District levels on 16.09.2015, against Subsidiary Tower Company.
The Forum meeting which met 31.0815, has taken the decision to conduct massive dharnas at the Corporate Office, Circle and SSA levels, against the decision of the Cabinet for formation of Subsidiary Tower Company. The meeting insisted that the government should give up it’s decision to form Subsidiary Tower Company. The meeting also decided to mobilise more than 1000 comrades in the dharna to be conducted at the BSNL Corporate Office, New Delhi. All circle and district secretaries are requested to organise the dharna very effectively.
அருமைத் தோழர்களே ! 31.08.15 அன்று டெல்லியில் கூடிய அகில இந்திய FORUM நமது BSNLடவர்களை  தனியாக பிரிக்கும் கேபினட் முடிவுக்கு எதிராக இந்திய நாடு முழுவதும் மத்திய,மாநில,மாவட்ட தலைநகரங்களில் 16.09.15 அன்று FORUM தார்ணாவை மிகவும் சக்தியாக நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது ... தயாராகுவோம் 16.09.15 தார்ணாவிற்கு... 

செப் -2, பங்கேற்றவர்களுக்கு பாராட்டுயும்...ம்,நன்றி



செப் -2, பங்கேற்றவர்களுக்கு பாராட்டுயும்...ம்,நன்றி

அருமைத் தோழர்களே ! இந்தியா முழுமைக்கும் நடைபெற்ற செப் -2, போராட்டத்தில் அனைத்து தொழிளார்களுடன் இணைந்து   பங்கேற்ற    அனைவருக்கும் நமது மத்திய, மாநில, மாவட்ட சங்கங்களின் பாராட்டும், நன்றியும் உரித்தாகட்டும் ... கிளிக் செய்யவும்.

Tuesday 1 September 2015

வெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை...






Read | Download


இந்திய நாடு முழுவதும் உழைப்பாளி வர்க்கம் ஒன்று திரண்டு நடத்தும் செப்டம்பர் 2- அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திடுவோம். நமது தேசத்தை பாதுகாப்போம். BSNLஐ பாதுகாப்போம்.