Wednesday 27 May 2015

தேசிய கருத்தரங்கம்





தேசிய கருத்தரங்கம்

இன்று (26-05-2015)   11 மத்திய  தொழிற்சங்கங்கள் பங்கேற்ற  தேசிய கருத்தரங்கம் புது டெல்லியில் நடைபெற்றது . இக் கருத்தரங்கில் நமது BSNLEU சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு , தலைவர் தோழர் பல்பீர் சிங் மற்றும் துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி  ஆகியோர் பங்கேற்றனர் .மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை எதிர்த்தும் , கார்போரேட்களுக்கு ஆதரவான மத்திய அரசின் போக்கை கண்டித்தும்    வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி பொது வேலை  நிறுத்தம் செய்வது என முடிவு அக் கருத்தரங்கில் எடுக்கப்பட்டு உள்ளது . நமது சங்கம் அம் முடிவை இதய பூர்வமாக ஏற்று கொண்டு உள்ளது .

டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்!





டாஸ்மாக்: தமிழர்களை மலடாக்கும் அம்மா திட்டம்!

நன்றி :விகடன் 
டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடிகள் தாண்டி விடும் என்ற “சாதனையை” நோக்கி தமிழக அரசு சென்று கொண்டிருக்கிறது.இதைப்போல வேறு வருமானம் அரசுக்கு இல்லை என்று சொல்லி மக்களை சாக வைத்தாவது டாஸ்மாக் சரக்கின் வருமானத்தின் மூலம் அரசு ஊழியருக்கு சம்பளமும், ஓட்டு வாங்க 'இலவசம்' என்ற பெயரில் லஞ்சமும் கொடுக்க முடிகிறது. டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு என்ற பெயரில் இருந்து டாஸ்மாக் மக்களை வாழவைக்கும் “சாதனைக்குரிய” திரவமாக மாறி விட்டது. உணவுப்பொருளில் கலப்படம் என்றால் கூட வழக்கு போடும் சட்டமுள்ள இந்த நாட்டில் " விஷமே உணவாக " வழங்கப்படுவதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது சட்டம்,கணவனைக் காணவில்லை, மகனை காணவில்லை என்று காவல் நிலையம் செலவதற்கு முன் டாஸ்மாக் கடையில் பார்த்து விட்டு புகார் கொடுக்கச் சொல்லும் அளவிற்கு டாஸ்மாக் கடையால் "காணாமல் போனவர்கள்" அதிகம். 108 அவசர வண்டி குடிகாரருக்கு மட்டுமே சொந்தம் எனபது போல குடியால் விபத்து, இருதய நோயாளிகள், மூளைச் சாவு அடைந்தவர்கள் 108 ஐ ஆக்கிரமித்து விட்டனர்.

திருமணம்,கோவில் திருவிழா என்றால் முன்பெல்லாம் மகிழ்ச்சியுடன் உறவினர்கள், நண்பர்கள் குடும்ப உறவுகளை ஒற்றுமைப்படுத்தும் என்ற நிலை மாறி திருமணம் என்றால் திடீர் போதைச் சண்டையும், கோவில் திருவிழா என்றால் போதை ஆசாமிகள் செய்யும் அடாவடியால் போலீஸ் தடியடியும் , சாலை மறியலும் அன்றாடச் செய்தியாகி விட்டன.தெய்வத்தால் நிம்மதி கிடைக்கும் என்று சொல்வதற்கு பதிலாக, மன நிம்மதியற்று அடுத்த முறை திருவிழாவிற்கு குடும்பத்துடன் செல்லக் கூடாது என்ற அளவிற்கு குடி போதையால் நடக்கும் கோவில் வன்முறைகள் குல தெய்வத்தை மறக்கச் செய்கின்றன.இலங்கையில் நடந்த இன அழிப்பை விட மோசமான இன அழிப்பு இங்கு நடைபெறுகிறது. அங்கு கொத்துக் கொத்தாக அணு குண்டு வீசினார்கள். இங்கு குவார்டர் குவார்டராக விஷம் ஊற்றுகிறார்கள். அங்கு சாவதற்கு பணம் வாங்கவில்லை. இங்கு சாவதற்கு முன்பணம் ஒவ்வொரு முறையும் அரசு வாங்கிக்'கொல்'கிறது”

வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்த தமிழன், இன்று வார இறுதி நாட்கள் என்றாலே காலை முதல் மறுநாள் திங்கள் காலை வரை அசைவ உணவுக்கு அடிமையாகி ,டாஸ்மாக் சரக்குடன் நடு ரோட்டில், டாஸ்மாக் கடையில் மயக்கத்தில் மன நோயாளி போல படுத்துக் கிடக்கின்றான்.திரைப்படங்களிலோ, பத்து நிமிடத்திற்கு ஒரு முறை டாஸ்மாக் விளம்பரப்படமா என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு போதைகாட்சிகளும், மகளே தந்தைக்கு பாசத்தில் ஊற்றிக்கொடுக்கும் "பாசமலர் " காட்சிகளும், காதலிக்கும் பெண்ணும் குடிப்பாள் என்ற"தத்துவமும்" சொல்லும் விதமான காட்சிகள்.அதேப்போன்று மெகாத் தொடர்களும் மக்களை டாஸ்மாக் சரக்கை சாகும் வரை மறக்க முடியாதபடி செய்கின்றன.டாஸ்மாக் கடையால் காவலர்களுக்கு கிடைக்கும் லாபமும் அதிகம். அன்றாடம் மதுவால் நடக்கும் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு தேடி வரும் மக்களிடமும், போதையால் வாகனம் ஒட்டுபவர்களிடம் "கவனித்து" வாகன ஓட்டிகளை அனுப்புவதும், ஒரு கையால் மதுவுடன் வண்டி ஓட்டுபவரை பிடிதுக்கொடுத்தாலும் பெரிய கேஸ் போடாமல் "கடமையை" செய்வதும், பெட்டி கேஸ் போடத் தேவையான தெருச் சண்டை களும் காவலர்கள் வாழ்வை வளமாக்கி வருகிறது. மாதந்தோறும் குற்ற வழக்கு கணக்கு காட்ட குற்ற வழக்கைத் தேடி அலைந்த போலீசார், காவல் நிலையத் தை விட்டு வெளியே செல்லாமல் குடி போதையால் நடக்கும் வன்முறை புகார்களுக்கு கட்ட பஞ்சாயத்து செய்யவே நேரம் இல்லாமல் திணறி வருகின்றனர்.ஏற்கனவே கேரளா, வட மாநிலத்தவர் ஆதிக்கத்தில் தமிழகம் தமிழர்களை தேடும் நிலைக்கு வந்துவிடு மோ என நினைக்கும் வேளையில்,மதுவால் தமிழர்களின் மலட்டுத்தன்மை அதிகரித்து தமிழ் இனம் அழியும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இன்றைக்குள்ள இளைய சமூகத்தினரின் பெரும்பாலான மது குடிப்போரின் பிரச்னையே நரம்புத் தளர்ச்சியும், ஆண்மை குறைவும்தான்.முதல்வர் வழக்கில் இருந்து விடுதலையாக எத்தனையோ பரிகாரங்கள் செய்துள்ளார். அதை எல்லாம் விட சக்தி வாய்ந்த பரிகாரம் மக்களின் ஏகோபித்த வாழ்த்தும், ஆசிர்வாதமும்தான். அதை மீறிய பரிகாரம் ஏதும் கிடையாது. அந்த வாழ்த்து டாஸ்மாக் கடை மூடுவதன் மூலம் நிச்சயம் கிடைக்கும்.


ஒரு காலத்தில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டவுடன் அரசு என்ன நஷ்டத்தில் ஓடிப்போய் விட்டது?? அது போலத்தான் துணிவுடன் 'டாஸ்மாக்'கை தடை செய்ய வேண்டும். அரசுக்கு வருமானம் இல்லை என்பதும், அதனால்தான் டாஸ்மாக் சரக்கை ஊற்றிக்கொடுக்கிறது எனச் சொல்வதும் அரசுக்கு வருமானத்திற்கு வேறு வழி இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது.அனைத்து கனிம வளங்களையும் அரசு கைப்பற்றி நேரடியாக அல்லது தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலமாகவோ ஏற்றுமதி செய்து வருமானம் பார்க்க முடியும். அரசை ஏமாற்றி சம்பாதித்தவர்களே பல லட்சம் கோடிகள் குவிக்கும்போது அரசே நேரடியாக ஏற்றுமதி செய்யும்போது ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிகள் பெற முடியாதா?? அரசு தமிழகத்தில் இருந்து தாது மண், கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்து கனிம வளத்தை கைப்பற்ற வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் இரண்டு வண்டி வைத்தது தொழில் ஆரம்பித்த ஆம்னி பஸ் நிறுவனம், இன்று 200 வண்டிகள் வாங்கும் அளவிற்கு ஒரு கையில் மதுவுடன் வண்டி ஒட்டி சம்பாதிக்கும் நிலையில், அரசு பேருந்து மட்டும் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க சென்னை ஐ. ஐ.டி மாணவர்கள் குழுவைக கொண்டு ஆராய வேண்டும். பார்சல் போக்குவரத்தை அரசு தொடங்க வேண்டும்.நகரில் ஷேர் ஆட்டோக்களை ஒழித்து அரசு சிற்றுந்து பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும்.உங்கள் வழக்கு விடுதலைக்காக கோவில் கோவிலாகச் சென்ற மக்கள் பல லட்சம், அவர்களில் மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேற்றியவர்கள் அதிகம்.அவர்கள் குடும்ப நலனுக்கு நீங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறீர்கள்? இலவசம் அளித்து மனிதர்களை கொல்வதைக் காட்டிலும், இலவசம் இல்லாமல் இனிமையான வாழ்விற்கு டாஸ்மாக் கடைகளை மூடுவது மக்களின் நிம்மதிக்கு வழி வகுக்கும் என்பதே உண்மை.
அம்மா செய்வார்களா?

Wednesday 20 May 2015

CHQ NEWS



(Estt.) urged to send expeditious guideline to Tamil Nadu circle on calculating JTO LICE vacancies.
Com. P. Abhimanyu, GS, met Ms. Madhu Arora, GM(Estt.),  on 19.05.2015, and discussed the following issues.
(1)  The GS urged upon the GM (Estt.) and Shri A.K. Singh, AGM (Pers.IV) to immediately issue necessary guideline to Tamil Nadu circle, on the method of calculating vacancies for the JTO LICE held on 02.06.2013. The GS also discussed with them the recent judgement of the Hon’ble Madras High Court, on the JTO LICE, for further and appropriate legal action.
(2)  The GS demanded the GM (Estt.) to honour the judgement of the Hon’ble CAT Ernakulam bench, as well as the Hon’ble High Court of Kerala, in the matter of promotion from Junior Accountant to Senior Accountant.
(3)  The GS pointed out that all the Telecom Mechanics who were conferred with Temporary Status prior to 30.09.2000 should be issued with Presidential Orders. He further pointed out that while calling for data from the circles, the Corporate Office has laid down 10.04.2006 as the cut of date, which is a violation of the DoT orders.
(4)  The GS demanded that the Overtime Rates should immediately be revised as per the judgement of the Hon’ble Mumbai High Court. BSNLEU has already written in this regards to the Corporate Office.  

The GM (Estt.) assured to take appropriate action on the issues represented by the GS, BSNLEU.


Varanasi – BSNLCCWF addresses Prime Minister




Slavery wage in BSNL in Varanasi – BSNLCCWF addresses Prime Minister


BSNL Casual and Contract Workers Federation has addressed a letter to Prime Minister Shri Narendra Modi informing him about the wage slavery of the BSNL Contract Workers in UP and especially in Varanasi, the constituency from which he has been elected. Only Rs. 1500 – 3000 are paid where as they are eligible at least about Rs. 7,000/- at the lowest. BSNLCCWF has requested the PM to look in to the matter and ensure implementation of minimum wage, EPF, ESI etc.
Will the Prime Minister or his Office have time to mete out justice to the hard working casual contract workers?


Bsnleu chq news



Two year ITI certificate holders and Sports Assistants in the pay scale of Rs.9020 – 17430 with five years service are eligible to appear TTA LICE.
As regards the eligibility to appear the LICE for promotion to the cadre of TTA, Corporate Office has issued the following two clarifications.
(1)   Officials holding two year ITI certificate in any discipline is eligible to appear the LICE for TTA.
(2)   Sports Assistants who are in the pay scale of Rs.9020 – 17430 and with five years of residency service in the pay scale are eligible to appear the LICE for TTA.<<view letter>>

Bsnleuchq news....




BSNLEU writes to the CVO, on the threatening and blackmails of shri Rohit Sabharwal, contractor, Ludhiana.<<view letter>

மாநில செயர்குழு 03-06-2015






Read | Download

மாநில செயர்குழு 03-06-2015
மாநில செயர்குழு 03-06-2015 அன்று சென்னையில் நடைபெறும். (அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது)

மே-21, தோழர்.R.உமாநாத் முதல் ஆண்டு நினைவு நாள்.



மே-21, தோழர்.R.உமாநாத் முதல் ஆண்டு நினைவு நாள்.

 தோழர்.ஆர்.உமாநாத் அவர்கள்  விட்டுச் சென்ற பனி முடிப்போம்,. தோழர்.ஆர். உமாநாத் நாமம் வாழ்க!  இந்நாளில் தோழர்.ஆர்.உமாநாத் அவர்கள் வழி நடக்க உறுதி கொள்வோம். . . .

10.06.15 பெருந்திரள் தார்ணா BSNLEU + TNTCWU . . .



10.06.15 பெருந்திரள் தார்ணா BSNLEU + TNTCWU . . .

அருமைத் தோழர்களே !  நமது BSNL கார்பரேட் அலுவலக உத்தரவின்படி ஒப்பந்த ஊழியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 10.06.15 அன்று இணைந்த  பெருந்திரள் தார்ணா BSNLEU + TNTCWU . . .மாநில சங்க சுற்றறிக்கை காண கிளிக்.

Friday 15 May 2015

14.05.15 நடைபெற்ற NJCM மீட்டிங் விவாதிக்கப்பட்டவை.





14.05.15 நடைபெற்ற NJCM மீட்டிங் விவாதிக்கப்பட்டவை.

·         ·          ஊழியர் தரப்பு பல்வேறு பிரச்சனைகளில் நிர்வாகத்தின் தாமதத்தை NJCM செயலர் என்ற முறையில் நமது பொதுச் செயலர் தோழர்.P. அபிமன்யு 6 பிரச்சனைகள் மீது சுட்டிக்காட்டினார் குறிப்பாக கவுன்சில்மீட்டிங் காலதாமதமாக நடத்துவது மாநில மற்றும்மாவட்டமட்டங்களில் ஒரு தவறான் முன் உதாரணமாக ஆகிவிடும் ஆதலால் இது தவிர்க்கப்பட வேண்டும் என கூறியதுகுறிப்பாகடிராப்மேன்களுக்கு ஒரு இளநிலை பொறியாளருக்கான தேர்வு நடத்தவேண்டும் என்ற முடிவு இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. JTO RR and E-1 pay scale தாமதம்இரவு இலவசமாக பேசும் வசதி ஊழியர் அனைவருக்கும் விரிவுபடுத்துதல்,அலுவலகங்களில்  கூட்டம் போட அனுமதி மறுப்பு போன்ற பிரச்சனைகளையும் நினைவுபடுத்தினர்.பிறகு மற்ற பிரச்சனைகள்விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
·          22.07.1997 and 08.09.2000, இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற தேர்வுகளில் இடஒதுக்கீடு அமுலபடுத்தப்படவேண்டும்:
          இது பற்றி DoP&T –க்கு குறிப்பு அனுப்பபட்டுள்ளதுஅதுவந்த பிறகேமுடிவு எடுக்கமுடியும். 
·          பென்ஷன் 60 சதவீதம் நாம் தருவது நிறுத்தப்பட வேண்டும்:
        இதுபற்றி  DoT.-க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதுஅதுவரும்வரை காத்திருக்கவேண்டும். 
·          BSNL MRS  மறுபரிசலனை செய்யப்படவேண்டும்:
         இதுகுறித்து ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். 
·          30-9-2000 முன்னாள் TSM ஆக இருந்தவர்கள் நேரடியாக டெலிகாம் மெகானிக்களாக நியமிக்கப்பட வேண்டும்:             இதுகுறித்தவிபரங்களை மாநில நிர்வாகத்திடம் பெற்று DOT –க்கு அளித்து அதன்  பிறகு ஒப்புதல் பெற்ற பிறகு அமுல்படுத்தப்படும். 
·          ஒர்க்ஸ் கமிட்டி மீட்டிங் மாநில மற்றும் அகில இந்திய மட்டத்தில் நடத்தப்பட வேண்டும்மாவட்ட அளவில் சரியாகநடத்தப்படவில்லை:
         இதுகுறித்து ஆலோசித்து முடிந்தால் மாநில அளவில் நடத்த முயற்சி செய்யப்படும். 
·          NEPP  பிரச்சனையில் உள்ள முட்டுக்கட்டைகள் நீக்கப்படவேண்டும்:
      இதுவரை மொத்தமாக 16000 பேர் பாதிக்கபட்டுள்ளனர்அதுவும்  குறிப்பாகs 8501 ஊழியர்கள்  NE-3 pay scale-ல் பதவிஉயர்வுஇல்லாமல்  பாதிக்கப்பட்டுள்ளனர்.:
இது குறித்து ஒரு சரியான முடிவு எடுக்கப்பட்டு கூடியவிரைவில்  பிரச்சனை தீர்க்கப்படும் 
·          பெண்களூக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் தொந்திரவு குறித்து விசாரிக்க ஏற்படுத்த்ப்பட்ட கமிட்டியில் சங்கத்தின் சார்பாகஒரு பெண் ஊழியர் நியமிக்கப்பட வேண்டும்:
        இது குறித்து அரசு வழிகாட்டுதல்படியே கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 
·          MTNL பகுதியில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் ரூ.200/- சிம் தரப்படவேண்டும்மற்ற கம்பெனி நம்பர்களுக்கும் பேச இந்தசிம்மில் அனைவருக்கும் வசதி தரப்பட வேண்டும்:
       இது குறித்து கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும். 
·          அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளுக்கு மெயின் தீவிலிருந்து கடலுக்கடியில் கேபிள் அமைக்க உத்தரவு இடவேண்டும்.
       இது மத்திய அரசின் முடிவு ஆகும்சேட்டிலைட் மூலமாக அந்தமான் பகுதிகளுக்கு பிராட்பேண்டி வசதிவிரிவுசெய்யப்படும். 
·          அந்தமான் பகுதியில் மூன்றாம் (TTA and Sr.ToA) பிரிவு ஊழியர்கள் பணிசெய்ய ஆள் எடுக்கப்படவேண்டும்அங்கு பற்றாகுறைஅதிகமாக உள்ளது.
         நேரடி நியமனமாக TTA –க்கள் நியமிக்கபட உள்ளனர்.
·          வீட்டு வாடகைப்படி நகரத்திலிருக்கு எட்டு கிலோமீட்டரில் இருப்பவருக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்:
          இதுமத்திய அரசின் முடிவுநாம் எதுவும் செய்ய இயலாது. 
·          தொழிலாளர் குடியிருப்பில் உள்ள காலி குடியிருப்பை கணவனை இழந்த தொழிலாளியின் மனைவிற்கு தரப்படவேண்டும்:
        இதற்கு ஒப்புகொள்கிறோம்விரைவில் உத்தரவு அனுப்பப்படும். 
·          நக்ஸல் பகுதிகளில் வேலைபார்க்கும் ஊழியருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்:
          இது குறித்து பரிசீலிக்கப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும்

Thursday 14 May 2015

BSNL நிறுவனத்தில் 400 மேலாண்மை டிரெய்னி பணிகள்.





BSNL நிறுவனத்தில் 400 மேலாண்மை டிரெய்னி பணிகள்...

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNLநிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 மேலாண்மை பயிற்சிபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bharat Sanchar Nigam Ltd (BSNL)
காலியிடங்கள்: 400
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
வெளிப்பிரிவு:
1. Telecom Operations - 150
2. Telecom Finance - 50
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
உள் பிரிவு:
3. Telecom Operations - 150
4. Telecom Finance - 50
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள்:
ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் தொலைத்தொடர்புஎலக்ட்ரானிக்ஸ்,கணினியில்ஐடிஎலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி. அல்லதுபி.டெக் முடித்திருக்க வேண்டும்.
நிதியியல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஐசிடபுள்ஏசிஎஸ் போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்கவேண்டும்.
சம்பளம்மாதம் ரூ.24,900 - 50,500
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.750.
விண்ணப்பிக்கும் முறைwww.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி14.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bsnl.in/opencms/ export/sites/default/ BSNL/ about _us/ hrd/ pdf/ MTExternal.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.