Monday 27 April 2015

மதிய சங்க செய்தியை மாநிலசங்கம் வெளியிட்டுள்ளது...





மதிய சங்க செய்தியை மாநிலசங்கம் வெளியிட்டுள்ளது...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மதிய சங்க செய்திகளை தொகுத்து நமது தமிழ்  மாநிலசங்கம் வெளியிட்டுள்ளது... அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

சென்னை CGM அலுவலகம் முன்பு.. பெருந்திரள் பட்டினிப்போர்..புகைப்படங்கள்





Read | Download

பெருந்திரள் பட்டினிப்போரின் புகைப்படங்கள்
29.04.2015 அன்று இயக்க மாண்பை காத்திட தமிழக FORUM சார்பாக நடைபெற்ற பெருந்திரள் பட்டினி போரின் ஒரு சில காட்சிகள்

சென்னை CGM அலுவலகம் முன்பு.. பெருந்திரள் பட்டினிப்போர்..

அருமைத்  தோழர்களே ! தோழியர்களே !! இந்திய நாடு முழுவதும் நடைபெற்ற ஏப்ரல் 21,22 வேலைநிறுத்தம்மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதுதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தம்வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதுசென்னையில் வேலை நிறுத்தம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதுவேலைநிறுத்தத்தை சீர்குலைக்கும் வேலைகளை சென்னை CCM அலுவலகத்தில் அமுதவாணன் போன்ற சிலர் முயற்சிசெய்தனர்எனினும் நமது தோழர்கள் மிகவும் கவனமாக வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கியுள்ளனர்ஆனால்அமுதவாணன் காவல் துறையில் நமது தலைவர்கள் Forum கன்வீனர் S.செல்லப்பா Forum தலைவர்R.பட்டாபிராமன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது பொய்புகார் கொடுத்துள்ளார்அதன் விசாரனைக்காக நமதுதலைவர்களை காவல் துறை திங்கள் கிழமை (27.04.2015) அன்று அழைத்திருக்கிறதுபல பொய்புகார்களைஇதற்கு முன் சந்தித்திருக்கிறோம்இந்த பொய்புகாரையும் எதிர்கொள்வோம்நமது போராட்டங்களை தகர்க்கமுயலும் எந்த சக்தியையும் அனுமதியோம். Forum மிகவும் ஒற்றுமையாக இந்த பொய்புகாரை சந்திக்கும்.தவிடுபொடியாக்கும்..இயக்க மாண்பை காக்க... CGM அலுவலகம் முன்பு.. பெருந்திரள் பட்டினிப்போர்....மாநில சங்க சுற்றறிக்கையை இங்கே காணவும்   

Saturday 25 April 2015

BSNL"லேன்ட் லைன்"இரவு 9 TO காலை 7 மணி இலவசம்...




BSNL"லேன்ட் லைன்"இரவு 9 TO காலை 7 மணி இலவசம்...

அன்பிற்கின்யவர்களே ! தொழிலாளர் தினமான "மே" 1-ந் தேதி முதல் BSNL"லேன்ட் லைன்"இரவு 9 மணி முதல்  காலை 7 மணி இலவசம்.... 
நாடு முழுவதிலுமுள்ள அனைத்து நிறுவன தொலைபேசிசெல்லிடப்பேசிகளுக்கு , இரவு நேரத்தில்தங்களது நிறுவனத் தரை வழித் தொலைபேசி மூலம் அழைக்கும் சேவையை மே 1ஆம் தேதியிலிருந்துBSNLநிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது.இதுகுறித்து BSNLநிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்கூறியுள்ளதாவது:எங்களது தரைவழித் தொலைபேசி மூலம்நாடு முழுவதும் உள்ள அனைத்துசெல்லிடப்பேசிதொலைபேசி நிறுவனத்திற்கும் மேற்கொள்ளும் இரவு நேர அழைப்புகளை,மே 1ஆம்தேதியிலிருந்து இலவச அழைப்பு சேவையாக BSNL வழங்க உள்ளது.இந்தத் திட்டத்தின்படி BSNLநிறுவனதொலைபேசியிலிருந்து இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணிவரை மேற்கொள்ளும் அழைப்புகள் இலவச அழைப்பாகவழங்கப்படும்.கிராமம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில்தரைவழித் தொடர்பு சேவையில் இணைப்பு பெறப்பட்ட குறிப்பிட்டதிட்டங்களில்தரைவழித் தொடர்பு சிறப்புத் திட்டங்கள்,  அகல அலைவரிசை இணையத்துடன் கூடிய தரைவழித் தொடர்புதிட்டங்கள் என அனைத்து வகையான திட்டங்களும் இரவு நேர இலவச அழைப்பு சேவைத் திட்டத்தின்  கீழ் கொண்டுவரப்படுகிறது என்று BSNLஅதிகாரி தெரிவித்தார்..

பங்குச் சந்தையில் 5% முதலீடு -P.F. நிதி மோ(ச)டி அரசு...







தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் 5 சதவீத நிதியை பங்குச் சந்தைகளில்முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதுஇதன்படி நாடு முழுவதும் உள்ளதொழிலாளர்களின் சேமிப்புப் பணமான பி.எப்நிதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் கோடிஅளவிற்கு உடனடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்டம்துவங்கவிருக்கிறது.பி.எப்நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது என்றுசிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கடுமையாக எதிர்த்துவருகின்றனஎனினும்,மோடி அரசு தொழிற்சங்கங்களின் எதிர்ப்பைஅலட்சியப்படுத்தியுள்ளது.2014-15ம் ஆண்டு கணக்கின்படி பி.எப்நிதியத்தில் மொத்தம்ரூ.80 ஆயிரம் கோடி அளவிற்கு தொழிலாளர்களின் சேமிப்பு பணம் குவிந்திருக்கிறது.இந்த பெரும் தொகைபெரு முதலாளிகளின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கின்றன.நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களும்ஊழியர்களும் வியர்வை சிந்தி சேமித்த இந்தப்பணத்தை அவர்களுக்கே தெரியாமல் சூறையாடி பெருமுதலாளிகளின் கைகளில் சேர்ப்பதற்கு மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல்தீவிரமாக முயற்சித்து வருகிறது.இதன் ஒரு பகுதியாகவே, 15 சதவீத நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் போவதாக அரசுமுதலில் அறிவித்ததுஆனால் எந்தவிதத்திலும் பங்குச் சந்தையில் பி.எப்நிதியை முதலீடு செய்யக் கூடாது என்றுதொழிற்சங்கங்கள் வலியுறுத்தினஇந்நிலையில், 5 சதவீத நிதியை முதற்கட்டமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிஅளித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெள்ளியன்று அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.தற்போது ரூ.80 ஆயிரம்கோடியாக உள்ள ஒட்டுமொத்த பி.எப்நிதியானதுநடப்பு நிதியாண்டின் இறுதியில் ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறதுஅப்படியானால் பங்குச் சந்தையின் முதலீடு செய்யப்படும் தொகையும் அதிகரிக்கும்.முதலீடு செய்யத்தக்கநிதியின் அளவே ஒரு லட்சம் கோடியாகும்ஒட்டுமொத்தத்தில் பி.எப்வாரியத்தின் கையில் உள்ள நிதியின் மதிப்பு ரூ.6.5 லட்சம்கோடி ஆகும்.இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரும் சொத்தினை கபளீகரம் செய்வதற்குதனது முதல்படியைதுவக்கியிருக்கிறது மோடி அரசுஇதற்கு எதிராக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கண்டனக் குரல் வலுத்துள்ளது...