Friday 23 May 2014

புதிய தலைமை பொது மேலாளர்




பி.எஸ்.என்.எல். புதிய தலைமை பொது மேலாளர் பொறுப்பேற்பு
  • First Published: May 21, 2014 2:21 AM
  • Last Updated: May 21, 2014 2:21 AM
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் புதிய தலைமைப் பொது மேலாளராக ஜி.வி.ரெட்டி அண்மையில் பொறுப்பேற்றார்.
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் புதிய தலைமைப் பொது மேலாளராக ஜி.வி.ரெட்டி அண்மையில் பொறுப்பேற்றார்.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு வட்டத்தின் தலைமைப் பொது மேலாளராக பொறுப்பு வகித்த அஷ்ரஃப் கான், பி.எஸ்.என்.எல். தலைமையகத்தின் நிர்வாக இயக்குநராக (நியூ பிஸினஸ்) பதவி உயர்வு பெற்றதால், அவரது பொறுப்புக்கு ஜி.வி.ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
1980-ஆம் ஆண்டு இந்திய தொலைதொடர்பு பணிக்குத் (.டி.எஸ்) தேர்வான ஜி.வி.ரெட்டி நாகாலாந்து, கடப்பா, ஹைதராபாத், செகந்தராபாத், பெங்களூரு பி.எஸ்.என்.எல் வட்டங்களில் பொது மேலாளராகப் பொறுப்பு வகித்தவர்.
இந்திய தொலை தொடர்பு நிறுவனத்தின் (டி.சி..எல்.) திட்ட மேலாளராகப் பணியாற்றியுள்ள ஜி.வி.ரெட்டி, இதற்கு முன்பு பி.எஸ்.என்.எல். (தெற்கு மண்டலம்) தலைமை பொது மேலாளராக பதவி வகித்துள்ளார்.
Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.


No comments:

Post a Comment