Tuesday 17 December 2013

GPF பட்டுவாடா .வங்கி கடன்



GPF பட்டுவாடா

கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக GPF பட்டுவாடா செய்வதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி நமது துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி அவர்கள் இன்று பொது மேலாளர் (BFCI ) அவர்களை சந்தித்து பேசிய போது கார்போரேட் நிர்வாகம் கடும் பண பற்றாகுறையை சந்தித்துள்ளதாகவும் போதிய நிதி இல்லை என்றும் GM  (BFCI ) அவர்கள் கூறியுள்ளார் . நமது துணை பொது செயலர் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக GPF பட்டுவாடா செய்ய வேண்டும் என கடுமையாக வலியுறுத்தி உள்ளார் .

வங்கி கடன்

யூனியன் வங்கி,கனரா வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்த புதுப்பித்தல் பிரச்சினையை இன்று நமது துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி அவர்கள் பொது மேலாளர் (BFCI) அவர்களுடன் விவாதித்தார்.நமது கார்போரேட் அலுவலகம் இது விசயமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் மேலும் இது தொடர்பாக வங்கிகள் நமது நிறுவனத்தை அணுகி வருகின்றன என்றும் பொது மேலாளர்   (BFCI) அவர்கள் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment