Wednesday 20 November 2013

செய்தி .துளிகள்

செய்தி .துளிகள்

மத்திய  அரசு இனி BSNL மற்றும் MTNL தொடர்புகளையேபயன்படுத்த வேண்டும்--மத்திய அரசு முடிவு
    செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொலைதொடர்பு துறைசெய்தி தொடர்பாளர் இனி மத்திய அரசு அலுவலகங்களில் BSNLமற்றும்  MTNL லேண்டலைன் பிராட்பேண்டுகளை பயன்படுத்தவேண்டுமென அரசு  முடிவு செய்துள்ளதுபொதுத்துறைநிறுவனங்களான BSNL மற்றும்  MTNL நிறுவனங்களை  சரிவிலிருந்துமீட்கவே இந்த முடிவு என்றார்இதற்கான அமைச்சரவை முடிவு கூடியசீக்கிரம் வெளியிடப்படும்இதுவரை மத்திய அரசு நிறுவனங்கள் மற்றதனியார் AIRTEL & VODAFONE  இணைப்புகளை பயன்படுத்திக்கொண்டிருந்தால் அவை உடனடியாக சரண்டர் செய்யப்பட வேண்டும்என வலியுறுத்தப்பட்டுள்ளது.  இதே போல மாநில அரசும்செயல்படுத்தும் என எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி கூறினார் . BSNLமற்றும் MTNL-ஐ மேம்படுத்த அமைச்சர்கள் குழுஅமைக்கப்பட்டிருப்பதை  அனைவரும் அறிவோம்அதன் தலைவராகமத்திய அரசின் நிதி அமைச்சர் .சிதம்பரம் இருக்கிறார்அவரின்கவனத்திற்கும் இந்த முடிவு கொண்டு செல்லப்படும்.


7 வது அனைத்திந்திய மாநாடு

       நமது BSNL ஊழியர் சங்கத்தின்  7 வது அனைத்திந்திய மாநாடு வரும் நவம்பர் 2014-லில் கொல்கத்தா நகரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக நமது மத்திய சங்கம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம்,கொல்கத்தா டெலிபோன்ஸ்,டெலிகாம் பாக்டரி மற்றும் டெலிகாம் ஸ்டோர் ஆகிய மாநிலங்கள் இணைந்து அனைத்திந்திய மாநாட்டை நடத்தும் .

TTA ஆளெடுப்பு விதிகள் மாற்றம்

கார்போரட் நிர்வாகம் TTA ஆளெடுப்பு விதிகளுக்கான வரைவை வெளியிட்டு உள்ளது . வரைவை  பார்க்க :-Click Here

No comments:

Post a Comment