Wednesday 13 November 2013

செய்தி துளிகளில் சில....


தோழியர் K .K .விஜயா ( SR TOA கேரளா மாநிலம்)--- நெகிழ்ச்சி.... 
   நவம்பர் 6 முதல் 8 வரை நமது BSNLEU  கேரள மாநிலச்சங்கத்தின் 7 -வதுமாநில மாநாடு கோட்டயத்தில் நடைபெற்றது. நமது பொதுச்செயலர்தோழர் P.அபிமன்யு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்.அதற்குப்பின்னர் தோழர் ,தோழியர்களுக்கு சந்தேகங்கள் ,விளக்கங்கள்கேட்கலாம் என வழக்கம்போல் அறிவிக்கப்பட்டது. பலரும் தங்களதுசந்தேகங்களை,விளக்கங்களை சீட்டில் எழுதி கொடுத்தனர். அதில் ஒரு சீட்டில்எழுதி இருந்ததை நமது பொதுச்செயலர் முகமலர்ச்சியோடு படிக்கிறார். அக்கடிதவாசகம் ....
     தோழரே!,வணக்கம்.. என் மொத்த மாத சம்பளம் இப்போது அரை லட்சத்தைதாண்டிவிட்டது. நான் கனவில் கூட ஒரு நாள் என் சம்பளம்  அரை  லட்சத்தைதாண்டும்  என்று என் வாழ்வில் எதிர் பார்த்தது இல்லை . பிஎஸ்என்எல் ஊழியர்சங்கத்தால்  மட்டுமே இதை சாத்தியமாக்க  முடிந்தது. எனவே,BSNL ஊழியர்களின் பாதுகாவலன்,மற்றும் BSNL நிறுவன பாதுகாவலன் நமது BSNLEU சங்கத்திற்கு என்னை போன்ற அணைவரும் என்றென்றும் நன்றி கடன் பெற்றுள்ளோம்.
 "காஸியாபாத் பொதுமேலாளர் இடமாற்றம்
நவம்பர் 16, 2013ல் யுனைட்டெட் போஃரத்தின் சார்பில் நாம் நடத்தியவேலைநிறுத்தத்தின்  காரணமாகவும் நமது மத்தியசங்கத்தின் தொடர்முயற்சியின்
 பலனாகவும் நமது  BSNL ஊழியர்சங்கத்தின் காஸியாபாத்மாவட்டசெயலர் தோழர் சுகேந்தர் பால் சிங் கொலையில் தொடர்புடையகாஸியாபாத் பொது மேலாளர் அதேஷ் குமார் குப்தாவை இவ்வளவு கால தாமதத்திற்கு பிறகாவது  கார்ப்பரேட் நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளதே!


No comments:

Post a Comment