Saturday 31 August 2013

. ரூபாயின் மதிப்பு ஏன் குறைந்தது?



ஷோமே கமிட்டி தெரியுமா?
ந்தியாவில் அதிகமாக முதலீடு செய்துள்ள நாடு எது தெரியுமா? இந்தியப் பெருங்கடலில், ஆப்பிரிக்காவுக்கு அருகில் அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவான மொரீஷியஸ்தான். பொதுவாக, வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்தியாவில் மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். இந்த வரியை தங்கள் நாட்டிலும் கட்டலாம் அல்லது இந்தியாவிலும் கட்டலாம். மொரீஷியஸில் மூலதன ஆதாய வரி 0%. இதனால் இந்தியாவில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், மொரீஷியஸில் பெயருக்கு ஓர் அலுவலகத்தை திறந்து விடுகின்றன. சட்டப்படி அங்கு பதிவுசெய்துவிட்டு, அங்கிருந்து இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள். இதனால் மூலதன ஆதாய வரியாக செலுத்தவேண்டிய பல்லாயிரம் கோடி அவர்களுக்கு லாபம்.
வோடஃபோன் நிறுவனம் இப்படி 11,000 கோடி ரூபாய் மூலதன ஆதாய வரியைச் செலுத்தாமல் தப்பித்தது. 'அதைக் கட்டவேண்டும்’ என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, 'செலுத்தத் தேவையில்லை’ என உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, வரி தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பொது விதியை (General Anti Avoidance Rules) உருவாக்கினார். இதன்படி, வரி தவிர்ப்பை மட்டுமே நோக்கமாக கொண்ட வெளிநாட்டு முதலீட்டுகளுக்கு வரிச் சலுகைகள் ரத்து செய்யப்படும். உண்மையாகவே இந்தச் சட்டம் இந்தியாவுக்கு நன்மை செய்யக்கூடியதுதான். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களோ... 'நாங்கள் மொத்தமாக முதலீடுகளைத் திரும்பப் பெற்றுவிடுவோம்’ என்று மிரட்டின. இதற்கிடையே சிதம்பரம் நிதி அமைச்சர் ஆனார். வந்த வேகத்தில் ஷோமே கமிட்டி (Shome Committee) யை அமைத்து, பிரணாப் அமைத்த விதியை ஆராயச் சொன்னார். எதிர்பார்த்ததுப் போலவே அந்த கமிட்டி ஆராய்ந்து, 'பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழக்கம்போலவே வரிச் சலுகைகளை வழங்கலாம்’ என்று பரிந்துரைத்தது. அதைச் சிதம்பரமும் ஏற்றுக்கொண்டார்.
இந்த மொரீஷியஸ் நிறுவனங்களுக்கு மூலதன ஆதாய வரியை முறையாக வசூலித்தாலே, ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் இந்தியாவுக்குக் கிடைக்கும்!
 by  ஆனந்த விகடன்

No comments:

Post a Comment