Wednesday 17 July 2013

19-07-2013 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

19-07-2013 நாடு தழுவிய  ஆர்ப்பாட்டம் 

அருமைதோழர்களே! அனைவருக்கும்  வணக்கம். . . . . .

நமது  கொல்கொத்தா  மத்திய செயற்குழு முடிவின் அடிப்படையில் . . . . . 
 19-07-2013 அன்று  மதியம்  1 மணிக்கு  நமது GM அலுவலகத்தில்  நடைபெறும்  ஆர்பாட்டத்தில்
  அனைவரும் திரளாக  கலந்து கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் 

கோரிக்கைகள் : 
1.            NEPP -ல்  இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைவது;
2.            நீண்ட நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;
3.            RM மற்றும் Gr. D கேடரில் ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;
4.            கேடர்களின் பெயர் மாற்றம்;
5.            1.10.2000-ற்கு முன் பதவி உயர்வு பெற்று, அடுத்த INCREMENT தேதியில் விருப்பம் தெரிவித்தவர்கள் பிரச்சனை;
6.            நிறுத்தி வைக்கப்பட்டுள்ள BONUS, LTC, மெடிக்கல்  அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப பெறுதல்;
7.            பல்வேறு ALLOWANCE மாற்றி அமைப்பது;
8.            STOA / TM கேடர்களின் உயர் ஊதிய பிரச்சனை;
9.            TM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்துவது;
10.          காலியாக உள்ள SC / ST பதவிகளை நிரப்புவது;
11.          வாரத்தில் 5 நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;
12.          BSNL-ல் நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;
13.          1.1.2007-ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;
14.          கருணை அடிப்படையில் பணி  நியமனம் செய்வது;
15.          ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;இது போன்ற முக்கிய கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது
16.           
.அனைவரும்  ஆர்ப்பாட்டத்தில் திரளாக  கலந்து கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் 

       என்றும் தோழமையுடன்,

                                        C.சுவாமி குருநாதன் - மாவட்ட செயலர் ,

No comments:

Post a Comment