Thursday 30 May 2013

தீக்கதிர் 31/05/2013


கூட்டுப் பேர உரிமையும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும்!
உலகின் பல பகுதிகளில் தொழிலாளி வர்க்கம் தனது உரிமையைப் பாதுகாப் பதற்கான போராட்டத்தில் தீவிரமாக இறங் கியுள்ளது. நெருக்கடியில் இருந்து மீள்வது என்ற பெயரில், இரக்கமற்ற முதலாளித் துவ சுரண்டலுக்கு சலுகைகள் தந்து பாதுகாக்கும் அரசுகள் தொழிற்சங்க நட வடிக்கைகளைக் கட்டுப்படுத்த தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள தொழிற் சங்க ஊழியர்களுடனான ஆய்வுப் பட்ட றையை, மக்கள் சீனத்தில் ஐந்து தினங் கள் நடத்தியது. 10 நாடுகளில் உள்ள 16 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளாக 24 நபர்கள் கலந்து கொண்டனர்.


இதில் 11 பெண் தொழிற்சங்கத் தலைவர்களும் அடங்குவர். இந்தியாவில் இருந்து ஐ.என். டி.யு.சி சார்பில் ஒருவரும், சி.ஐ.டி.யு சார் பில் நானும் கலந்து கொண்டோம்.மக்கள் சீனத்தின் தொழிற் சங்கமான, அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, மேற்படி ஆய்வுப் பட்ட றையை நடத்தித் தரும் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்திக் கொடுத்தது. துவக்க நிகழ்ச்சி மற்றும் நிறைவு நிகழ்ச்சி ஆகிய வற்றையும் சேர்த்து 13 அமர்வுகள் நடத்தப் பட்டன. “சம்பள உயர்வு - வேலை வாய்ப்பு அதிகரிப்பு - நெருக்கடியில் இருந்து மீள்தல்” என்பது பொதுவான தலைப்பாக இருந்தது. 2008 ல் வெளிப் பட்ட பொருளாதார நெருக்கடி, நீடித்து நிற்கிற நிலையில், பலமானத் தொழிற்சங்க அமைப்புகளும், அதன் மூலம் தொழிலா ளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கூட்டு பேர உரிமைகளும் பலம் பெற வேண்டிய தேவை உலக அளவில் உரு வாகியுள்ளது. மனிதவளம் நிறைந்த ஆசியா கண்டம் மூலதனத்தை பெருமள வில் ஈர்த்து வருகிறது. ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில், வலுவான கூட்டு பேர உரிமை மூலம், நாகரீகமான ஊதியத்தை யும், வேலையையும் பெற முடியும், என் பதை நிறுவுவதே ஆய்வுப் பட்டறையின் பிரதான நோக்கமாகும்.பல்வேறு நாடுகளின் அனுபவங்கள்உலகப் பொருளாதார நெருக்கடி ஏற் பட்ட இரண்டு ஆண்டுகள் காலத்தில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் தெருவில் “நாங்கள் 99 சதவீதம்” என்ற முழக்கத் துடன் நீடித்து நடைபெற்றப் போராட்டம் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண் டிய ஒன்று. செல்வ வளம் மிகக்குறை வான நபர்களின் கைகளில் சிக்குண்டுள் ளது. அதேநேரத்தில் பொருளாதார நெருக் கடியில் இருந்து மீள்வதற்கு, அரசுகள் தொழிலாளர் உரிமைகளில் கை வைப் பதை ஏற்கமுடியாது என்பதேப் போராட் டக் காரர்களின் கோரிக்கையாகும். மேற்படிக் கோரிக்கைக்குக் காரணம், கடந்த 30 ஆண்டுகளாக வளர்ந்த நாடு கள் பின்பற்றியக் கொள்கைகள், அசமத்து வத்தை மிகப் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது ஆகும். அசமத்துவத்தின் அளவு உயர்வதை கட்டுக்குள் வைக்க பெரும் முத லாளிகள் மீதான வரிவிதிப்பில் சலுகை கள் கூடாது என்பது, மிகமுக்கியமான, ஒரு அணுகுமுறை, ஆனால் வளர்ந்த நாடுகளில் இந்த அணுகுமுறைத் தொடர்ந்து மீறப்பட்டுள்ளது. இதன் விளைவு பில்லியன் டாலர் கோடீஸ்வரர் களின் எண்ணிக்கை பெரும் எண்ணிக் கையில் உயர்ந்தது.சர்வதேச நிதி முனையம் (ஐ.எம்.எஃப்) வெளியிட்டுள்ள விவரங்களில் இருந்து ஐ.எல்.ஓ தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு. பொருளாதார ரீதியில் வளர்ந்த நாடுகள் என்று குறிப்பிடப்படு கிற, 16 ஐரோப்பிய நாடுகளின் தொழிலா ளர்களுக்கான வருவாய் சராசரி 1970 களில் 70 என்ற அளவில் இருந்து 1980 காலம் வரையிலும், சராசரி 80 என்ற அளவை நோக்கி உயர்ந்தது.


ஆனால் 1980 களில் சரியத் துவங்கியது. 2010ம் ஆண் டில் தொழிலாளர்களின் வருவாய் சராசரி 60 ஆகக் குறைந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தொழிலாளர் வருவாய் சராசரி 1970 களில் 70 என்பதில் இருந்து 1980களில் 75 என உயர்ந்து பின்னர் 2010ல், 55 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் 70 ஆக இருந்த வரு வாய் சராசரி, படிப்படியாகக் குறைந்து 2010ல் 53என குறைந்துள்ளது. அதாவது, வளரும் நாடுகளின் தொழிலாளர் வருவாய் 1970 காலத்தில் இருந்து படிப்படியாகக் குறைய மட்டுமே செய்துள்ளது. வளர்ந்த நாடுகளைப் போல் 1970 முதல் 80 காலத் தில் ஏற்பட்ட உயர்வையும் அனுபவிக்க வில்லை என்பது துயரம் தரும் செய்தி யாகும்.ஆனால் உற்பத்தித் துறையில் 1999ன் போது இருந்த உற்பத்தி அளவு 2010ன் போது, 15 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. தொழிலாளர் ஊதியமோ, கடந்த காலங்களை விட மிகக் குறைவாகவே உயர்வு பெற்றுள்ளது. தொழிலாளர்களுக் கான வருவாயில் ஏற்பட்டுள்ள குறை பாடு, உணவு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை நுகர்வதிலும் குறை பாட்டை உருவாக்குகிறது. இது மொத்தத் தில் உற்பத்தித் துறையைப் பாதிக்கவும், வேலை வாய்ப்பின் மீது உறுதியற்ற நிலையையும் ஏற்படுத்தவும் செய்கிறது. இதன் காரணமாக நெருக்கடியில் இருந்து மீள்வதற்குப் பதிலாக, மேலும் நெருக்கடிக் குள் சிக்கிக் கொள்ளும் தன்மை அதி கரித்து வருகிறது.மேற்படி நிலைமைகளின் தாக்கம் தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரி மையைக் கடுமையாகப் பாதிக்கிறது. அதே போல் அமைப்பு ரீதியில் திரட்டப் பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை யைக் குறைத்து, பலமடங்கு அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக் கையை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்தினை மிகப் பெரிய அளவில் தாக்கியுள்ளது. 2008 ல் 6.9 சதவீதமாக இருந்த வேலையின்மை, 2013 மார்ச் வரையில் மட்டும் 10.9சதவீதமாக உயர்ந்துள்ளது.


குறிப்பாக 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான வேலை யின்மை 23.5 சதவீதமாக வளர்ச்சி பெற் றுள்ளது. காண்ட்ராக்ட் முறையின் மூல மான வேலை வாய்ப்பும், சுய வேலை வாய்ப்பு என்று சொல்லிக் கொள்கிற வேலை வாய்ப்பும் அதிகரிக்கவும், கூட்டு பேர உரிமையைப் பறிக்கிற நிலையும் ஐரோப்பாவில் அதிகரித்துள்ளது. மக்கள் சீனத்தின் அனுபவம்சீனா மனிதவளம் நிறைந்த நாடு களில் முதல் இடத்தில் உள்ள நாடு என் பது அறிந்த ஒன்று. ஆண்டு ஒன்றுக்கு, 55.4 சதமான பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை உருவாக்க முடிந் துள்ளது. 23 சதமான பட்டதாரிகள் தற் போது வேலை செய்ய விரும்பவில்லை என்பதையும், 21 சதமான பட்டதாரிகள் வேலையற்றவர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். இது 2009 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தரும் தகவலாகும். மற் றொரு புறம், கடலோர மாகாணங்களிலும், புதிய தொழில் வளர்ச்சி உருவாகும் நகரப் பகுதிகளிலும் வேலைக்கான ஆள் பற் றாக்குறை உருவானது. அதேபோல் தொழில் வளர்ச்சி பகுதிகளை நோக்கி இடம் பெயர்வது அதிகரிப்பதும் இக்காலத் தில் முன்னுக்கு வந்த பிரச்சனையாக உள் ளது. குறிப்பாக ஃபாக்ஸ்கான் போன்ற மின்னனு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இளம் தொழி லாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவானது, அரசுக்கும், ஏ.சி. எஃப்.டி.யு விற்கும் மிகப் பெரிய சவாலாக விளங்கியது.இவைகளை எதிர் கொள்ள அரசு மற் றும் ஏ.சி.எஃப்.டி.யு ஆகியவை இணைந்து எடுத்த சில முயற்சிகள் பலன் தந்துள் ளன. வேலையாள் பற்றாக்குறை தனியார் நடத்தும் பெரும் நிறுவனங்களில் உருவாக அடிப்படைக் காரணம், போதுமான ஊதி யம் வழங்கப் படாதது என்பதைத் தனியார் நிறுவனங்களுக்கு சுட்டிக் காட்டின. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மாதம் ஒன்றுக்கு 147 அமெரிக்க டாலர் (900 யுவான்) அளவிற்கு வழங்கப் பட்ட ஊதியம் 2010ல் 197 டாலராகவும் (1200 யுவான்), அடுத்த ஆண்டில், 328 டாலராகவும் (2000 யுவான்) உயர்த்த நடவடிக்கை எடுக் கப் பட்டது. அதேபோல் ஹோண்டா நிறு வனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத் தம் செய்ததைத் தொடர்ந்து, மாதாந்திர ஊதியம் ஆண்டுக்கு 500 யுவான் (82 டாலர்) அளவிற்கு ஊதிய உயர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இது இளம் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக் கையை உருவாக்கியது. மேலும் அரசு சட்டரீதியில் குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலிக்கவும் அதன் அடிப்படையில் மாற்றத்தை ஏற் படுத்தவும் செய்ததால் முன்னேற்றம் உரு வானது. அதாவது, குறைந்த பட்ச ஊதியம் மாதத்திற்கு 1200 யுவான் (197 டாலர்), (11520 ரூபாய்) என்பதாகத் தீர்மானிக்கப் பட்டது.மேற்படி நடவடிக்கை, இளம் தொழி லாளர்களிடம் தனியார் துறையில் வேலை யில் சேரும் ஆர்வத்தை உருவாக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவும் பெருமளவில் பயன்பட்டுள் ளது. ஆசியக் கண்டத்தில் ஆண்டு சரா சரி ஊதிய உயர்வு 2008ல் 2.8 ஆக இருந்தது, 2009ல் 1.5 ஆக குறைந்தது. இதில் சீனாவின் பங்களிப்பான 0.8 சதத்தை கழித்து விட்டால், ஆசியா கண் டத்தின் ஊதிய உயர்வு வளர்ச்சி விகிதம் 0.7 சதமாக மட்டுமே இருக்கும். அதாவது மக்கள் சீனத்தில் ஊதிய உயர்வு விகிதம், ஒட்டு மொத்த ஆசிய நாடுகளின் கூட் டுத் தொகைக்கு சமமாக இருக்கிறது.


இதற்கு சீனாவில் உள்ள தொழிற் சங்க நடவடிக்கையும் ஒரு காரணம் எனச் சொல்கிறார்கள்.மக்கள் சீனத்தில் 76.4 கோடித் தொழி லாளர்கள் உள்ளனர். இவர்களில் ஏ.சி. எஃப்.டி.யு என்ற அனைத்து சீன தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பில், 28.9 கோடித் தொழிலாளர்கள் உறுப்பினர்க ளாக உள்ளனர். சீனத்தின் மொத்த உள் நாட்டு உற்பத்தி 1992ல் 14.2 ஆக இருந்த போது, ஊதிய வளர்ச்சி விகிதம் 6.5 ஆக இருந்தது. 2012ல் மொத்த உள்நாட்டு உற் பத்தி விகிதம் 8.1 இருக்கும் நிலையில், ஊதிய வளர்ச்சி விகிதம் 10.2 ஆக இருக் கிறது. இது தொழிற் சங்கத்தின் நட வடிக்கை என்பதாக இருந்தாலும், சீனா வின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பங் களிப்பு செய்துள்ளது.காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. வயோதிகர் பராமரிப்பு, சுகாதாரத் திட்டம், வேலையற்றோர் பராமரிப்பு, பணியின் போதான விபத்து, மகப்பேறு ஆகிய ஐந்து காப்பீட்டுத் திட்டங்களின் அடிப்படை யில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும், அக் காலத்திற்குரிய வருவாய் ஏற்பாடும் இதற் குள் அடங்கும். பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்திலும் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமையும், கூட்டு பேர உரி மையும் உறுதி செய்யப் பட்டு உள்ளதால், தனியார் நிறுவனங்களிலும், தொழிலாளர் ஊதியத்திற்கும் இதர சட்ட உரிமை களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டு உள்ளது. இவைகளின் விளை வாக மக்களின் நுகர்வுத் தன்மையில் மேம்பாட்டை உருவாக்கவும், உள்நாட்டு உற்பத்திக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் சீனாவின் நடவடிக்கை இருப்பதாலும், சீனாவின் ஏற்றுமதி தொடர்ந்து முன்னிலையில் இருப்ப தாலும் தான், வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார நெருக்கடி சீனத்தைப் பாதிக்கவில்லை.ஐ.எல்.ஓவின் ஆலோசனைகள்உலகப் பொருளாதார நெருக்கடி தீர்வது வேலை வாய்ப்பை அதிகரிப்பதிலும், ஊதிய உயர்வை மேம்படுத்துவதிலும் இனைந்து இருக்கிறது. ஊதிய உயர்வை பெறுவதற்கு கூட்டு பேர உரிமைகளை அரசுகள் உறுதி செய்வதும், அதன் மூலம் நுகர்வு சக்தி அதிகரிப்பதும், உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி அதிகரிப்பும் ஏற்படும். அமைப்பு சாராத் தொழிலாளர் களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய, குறைந்த பட்ச ஊதியத்தை ஆண்டுக் காண்டு பரிசீலித்து, பெருமளவில் உயர்வு காண வேண்டும். நாட்டின் ஊதிய பங் கீட்டில் உள்ள அசமத்துவத்தை குறைக் கும் ஏற்பாடு இல்லாமல், முதலாளித் துவம் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள முடியாது.ஐஎல்ஓவின் இந்த ஆலோசனை களை செயல்படுத்தி சிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும் இந்தியாவில் தொடர்ந்து போராடி வரு கின்றன. சமீபத்தில் கண்ணூரில் நடை பெற்ற சிஐடியு அகில இந்திய மாநாடு, இதற்கான போராட்டங்களை உறுதியாக முன்னெடுத்துச்செல்வோம் எனப் பிர கடனம் செய்துள்ளது.


என் நெஞ்சைத் தொட்ட புத்தகம் -பிரகாஷ் காரத் (தீக்கதிர்)

என் நெஞ்சைத் தொட்ட புத்தகம்
-பிரகாஷ் காரத்
‘‘தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய ‘‘சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு’’என்னும் புத்தகத்தை வெளியிடு மாறு நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தால் வெளி யிடப்பட்டிருக்கிறது. பொதுவாக புத்தக வெளி யீட்டாளர்களே புத்தகத்தை வெளியிடும் நிகழ் வில் கலந்துகொள்வதில்லை. எனினும் இப்புத் தகத்தின் உள்ளடக்கம் என் நெஞ்சை மிகவும் தொட்டுவிட்டதால் நான் இதனை வெளியிட ஒப்புக்கொண்டேன்.

நான் பார்த்த, படித்த புத்தகங்களிலேயே இந்தப் புத்தகம்தான் சென்னை மாநகரத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தைக் குறித்துப் பேசிடும் முதல் புத்தகமாகும். இப்புத்தகத்தில் 1918க்கும் இரண்டாம் உலகப்போர் துவங்கும் காலம் 1939க்கும் இடையிலான காலகட்டத் தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.

தோழர் திலீப் வீரராகவன் சென்னை மாந கரத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்ப கால கட்டங்கள் குறித்தும், சென்னை மாநக ரத்தில் தொழிற்சாலைகளும் தொழிலாளர் களும் உருவான பின்னணி குறித்தும் இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.

1918இல் மதராஸ் லேபர் யூனியன் அமைக் கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதலாவ தாகப் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாக மத ராஸ் லேபர் யூனியன்தான் கருதப்படுகிறது. மதராஸ் லேபர் யூனியன் மிகவும் நெருக்கமாக ‘பின்னி’ என்று அழைக்கப்படும் பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் ஆலையுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. சென்னை மாநகரில் இருந்த மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலை இது. இவ்வாலை 1980களில் முற்பகுதியில் மூடப்பட்டது. 1918இலிருந்து ‘பின்னி’ ஆலை தான் சென்னை மாநகரில் தொழிற்சங்க இயக் கத்தின் மையமாக இருந்திருக்கிறது. பம்பாய் மற்றும் கல்கத்தா மாநகரங்களோடு ஒப்பிடும் போது, அங்கேஇருந்த அளவிற்குத் தொழிற் சாலைகள் நிறைந்த நகரமாக சென்னையைச் சொல்ல முடியாது. பிரிட்டிஷார், சென் னையை தங்களுடைய அரசியல், நிர்வாகம் மற்றும் வர்த்தக மையமாகத்தான் நீடிக்க வேண்டும் என்று விரும்பியதால், இங்கே தொழிற்சாலைகள் திறக்கப்படுவதை அவர் கள் ஊக்குவிக்கவில்லை. டெக்ஸ்டைல்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சில இன்ஜினியரிங் தொழில்பிரிவுகள், டிராம், பஸ் போக்குவரத்து ஆகியவைதான் இங்கே இருந் திருக்கின்றன. இவை குறித்து இப்புத்தகத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, அங்கே தொழிற்சங்க இயக்கங்கள் உருவாகி வளர்ந்த தையும் வீரராகவன் மிகவும் நன்றாகக் குறிப் பிட்டிருக்கிறார்.

மதராஸ் லேபர் யூனியன் எவரும் எதிர் பார்க்க முடியாத பின்புலத்திலிருந்து வந்துள்ள மக்களால் தொடங்கப்பட்டது. இந்த சங் கத்தைத் துவங்கிய தலைவர்களில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுபவர் ஒரு மத நிறு வனத்தை நடத்தி வந்தவராவார். அவரது பெயர் ஜி. செல்வபதி செட்டியார். அவர் தன்னுடைய மதநிறுவன வளாகத்திலேயே ஓர் அரிசிக் கடையும் வைத்திருந்தார். தொழிலாளர்கள் அவரது கடைக்குச் சென்று அரிசியும், அதற்கு அடுத்த கடையில் எண்ணெய்யும், அதற்கு அடுத்ததாக இருந்த கடையில் துணிமணி களும் வாங்கிச் செல்வது வழக்கம். இக்கடை களின் உரிமையாளர்கள் என்ற முறையில் இங்கே கடை வைத்திருந்த இவர்களுக்குத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்தும், அவர் களின் பிரச்சனைகள் குறித்தும் தெரியும். இவர்கள்தான் மதராஸ் லேபர் யூனியன் தொடங்குவதற்கும் கருவிகளாக இருந்திருக் கின்றனர். உண்மையில் தோழர் வீரராகவன் மேற்படி செல்வபதி செட்டியாரை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார். மேற்படி செல்வபதி செட்டியார் 1985 வரை வாழ்ந்திருக்கிறார்.

மதராஸ் லேபர் யூனியன் உதயமானதை அடுத்து அது சென்னையைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழி லாளர்கள் மத்தியிலும் சங்கங்கள் தொடங்கு வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது.

தோழர் வீரராகவன் இந்தப் புத்தகத்தில் ‘பின்னி’யில் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் குறித்து நன்கு விளக்கியிருக்கிறார். மேலும் இப்புத்தகத்தில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்தும் விவரித்திருக்கிறார்.

சென்னையில் அப்போது ரயில்வே கம் பெனி ஒன்று உருவாகி இருக்கிறது. மதராஸ் மற்றும் தெற்கு மராத்தா என்று பெயரிடப்பட் டிருந்த அந்த ரயில்வே கம்பெனியில் இரண் டரை மாதங்களுக்கும் மேலாக வேலை நிறுத்தம் நடைபெற்றிருக்கிறது. அந்த சமயத் தில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய வீரஞ் செறிந்த வேலைநிறுத்தம் குறித்து வீரராகவன் மிகவும் அருமையான சித்திரத்தை வழங்கி யிருக்கிறார்.

தொழிற்சங்க இயக்கத்தை செல்வபதி மற்றும் சுயாட்சி இயக்கத்தை (ழடிஅந சுரடந ஆடிஎநஅநவே) சேர்ந்த பல தலைவர்கள் தலை மையேற்று நடத்தி இருக்கின்றனர். சென் னைதான் இந்திய பிரம்மஞான சங்கத்திற்கும், அன்னி பெசண்ட் அம்மையாரின் சுயாட்சி இயக்கத்திற்கும் தலைமையகமாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும். இவர்கள் தான் தொழிலாளர்களின் இயக்கங்களுக்கு ஆரம்பகாலத்தில் தலைமை வகித்திருக் கிறார்கள். மிகவும் ஆர்வத்தை அளிக்கக் கூடிய நபரான பி.பி. வாடியா பிரம்மஞான சங் கத்துடன்தான் நெருக்கமாக இருந்து வந்தார். இவர்தான் மதராஸ் லேபர் யூனியனுக்கும் ‘பின்னி’ ஆலைத் தொழிலாளர்களுக்கும் தலைமை வகித்துள்ளார். இவ்வாறு சங்கத் தின் தலைவர்களாக சீர்திருத்தவாதிகள்தான் இருந்திருக்கின்றனர் என்றும் அவர்கள் சுயாட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவோ, அல்லது பிந்தைய காலங்களில் காங்கிரசைச் சேர்ந்தவர்களாகவோ இருந்திருக்கிறார்கள் என்று வீரராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

1933க்குப் பின்னர்தான் இடதுசாரி சக்திகள் முன்னுக்குவருகின்றன. தென்னிந்தி யாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப் படும் சிங்காரவேலர் தொழிலாளர்களின் சங்கங்களை அமைக்கிறார்.

வீரராகவன் இவர்களில் பலரைச் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறார். காங்கிரஸ் சோச லிஸ்ட் கட்சி தேசிய இயக்கத்திலும் அகில இந்திய அளவில் தொழிற்சங்க இயக்கம், விவ சாய இயக்கம் ஆகியவற்றைக் கட்டுவதிலும் முன்னணியில் இருந்திருக்கிறது. ஆயினும் சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அத்தகைய தொரு நிலையைப் பெற முடியவில்லை. உண் மையில் தோழர் பி.சுந்தரய்யா தன் கம்யூனிஸ்ட் பணியை சென்னையிலிருந்துதான் துவங்கி னார். ஆயினும் தொழிற்சங்க இயக்கத்தில் கம் யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு என்பது துவக் கத்தில் இல்லை. மேலும் சென்னை, தொழிற் சங்க இயக்கத்தின் மையமாகவும் அப்போது மாறவில்லை.

வீரராகவன் தன் கண்பார்வையை இளம் வயதில் இழந்து விடுகிறார். இப்புத்தகத்திற் கான ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது அசாத்தியமானமுறையில் தன் நினைவு களின் அடிப்படையிலேயே இதனை எழுதி யிருக்கிறார். இதனை எழுதும் காலத்தில் ஆவணங்களைத் திரட்டி அவற்றின் அடிப் படையில் மட்டும் அவர் இதனை எழுதிட வில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த கம்யூ னிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, வி.பி. சிந் தன் போன்ற அனைவரையும் சந்தித்து, அவர் களைப் பேட்டி கண்டிருக்கிறார். தோழர் வி.பி. சிந்தன் என்னை ஆகர்ஷித்ததைப்போலவே, வீரராகவனையும் கணிசமான அளவிற்கு ஆகர்ஷித்திருக்கிறார்.

மாணவராக இருந்த காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராக இருந்திருக்கிறார். அப்போது நடைபெற்ற அரசியல் நடவடிக்கைகளில் அனைத்திலும் முழுமையாகத் தன்னை ஈடு படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். தொழிலா ளர்கள் நடத்திடும் வாயில் கூட்டங்கள், வேலை நிறுத்தங்கள் அனைத்திலும் அவரைக் காண முடியும்.

இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு வீரராக வனுக்குத் துணையாக இருந்தவர்களில் தோழர் எஸ்.எஸ். கண்ணன் மிகவும் முக்கிய மானவர். காரல் மார்க்ஸ் நூலகம் என்று தனி யார் நூலகத்தைத் தன்னந்தனியாக நடத்தி வரும் அவருக்கு வயது 90. அவர் வீரராகவ னுக்கு இப்புத்தகத்தை எழுதுவதற்கு படிப்பவ ராக (ளஉசiநெ-ஆக) இருந்ததுடன், புத்தகங்களை சேகரிப்பதிலும் தன்னை முழுமையாக ஈடு படுத்திக்கொண்டிருந்தார். இவரது தமிழாக் கத்தில் இப்புத்தகம் ஏற்கனவே தமிழில் வெளி வந்துவிட்டது.

இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் லெப்ட்வேர்ட் மிகவும் பெருமைப்படுகிறது. இதனை மிகவும் பாராட்டுவதுடன், அனை வரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார். பின்னர் இதனை அவர் வெளியிட, முதுபெரும் அறிஞர் ஜி.பி. தேஷ்பாண்டே அதனைப் பெற்றுக் கொண்டார். லெப்ட் வேர்ட் மேலாண்மை ஆசிரியர் சுதான்வா தேஷ்பாண்டே (மேனே ஜிங் எடிட்டர்) நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

தொகுப்பு: ச.வீரமணி
கைவிடும் மத்திய அரசு  கைகொடுக்கும் மாநில அரசு
உணவு - குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உயிர்வாழ்வதற்கான ஒரு அடிப்படை உரிமை. அந்த உரிமையைப் பாதுகாப்பதும், உணவை உறுதிப் படுத்துவதும் அரசின் தலையாயக் கடமை. மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசிப் பேர் பட்டினியோடுதான் வாழ்கிறார்கள் என்ற நிலைமை உள்ள இந்தியாவில் உணவுப் பாது காப்பு என்பது மிக முக்கியமான பணியாகிறது. சீரான பொதுவிநியோகம் உள்ளிட்ட தொலை நோக்குள்ள திட்டங்கள் விரிவாகவும் வலு வாகவும் செயல்படுத்தப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகிறது. ஆனால் மத்திய அரசு படிப்படியாகப் பொதுவிநியோக முறையையே ஒழித்துக்கட்டும் திசையில் பயணித்துக் கொண் டிருக்கிறபோது, உச்சநீதிமன்றமே சொன்னாலும் கூட உணவுக்கழகக் கிட்டங்கிகளில் புழுத்து வீணாகிக்கொண்டிருக்கும் பல லட்சம் டன் தானியங்களை ஏழைகளுக்கு விலையின்றி வழங்கப்போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறபோது, மாநில அரசுகளின் பொறுப்பும் சுமையும் அதிகரிப்பது இயல்பு.

தமிழக அரசு தற்போது பொறுப்புடன் அந்தச் சுமையை ஏற்றிருப்பது வரவேற்கப்பட வேண் டியதேயாகும். அவ்வகையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுவது மிக முக்கியமானதொரு பாதுகாப்பு நடவடிக்கை. சட்டமன்றத்தில் செவ்வாயன்று முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளின்படி, பொதுவிநியோக முறை மட்டுமல்லாமல், கூட் டுறவு அங்காடிகள் மூலம் கிலோ 20 ரூபாய் விலையில் சன்னரக அரிசி வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது. நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கப்படுவது 2014 மார்ச் வரையில் தொடரும் என்பதும் சட்டமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் இந்த உணவுப் பொருள் களின் விலை நடுத்தர வர்க்க மக்களால் கூட தாங்க முடியாத அளவுக்குச் சென்றிருக்கிறது. பதுக்கலும் கொள்ளை லாபமுமே மத்திய ஆட்சி யாளர்கள் திணித்த திறந்த சந்தைப் பொருளாதா ரத்தின் அன்றாட விதியாகியிருக்கிறது. இந் நிலையில் இயலாமையின் விளிம்புக்கே தள்ளப் பட்டுள்ள ஏழைகளின் வாழ்க்கையை எண் ணிப்பார்க்கிறவர்கள், தமிழக அரசின் இந்த நட வடிக்கைகள், நிச்சயமாக விலைவாசி உயர்வின் ஈவிரக்கமற்ற தாக்குதலிலிருந்து அவர்களைப் பெருமளவுக்குப் பாதுகாக்கும் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். அரசியல் மாறுபாடு களுக்கு அப்பாற்பட்டு ஆதரிக்க வேண்டிய இந்த நடவடிக்கைகள், திறந்த சந்தையில் விலைகள் உயர்வதையும் பெருமளவுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

சென்னையில் ஏழைகளின் வரவேற்பைப் பெற்றுள்ள மலிவு விலை உணவகங்களும் இதில் பங்களிக்கக்கூடியவை. இந்த உணவகங் கள் மற்ற மாநகர்களிலும் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டாக வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தி யாக வேண்டும். கூட்டுறவு அமைப்புகளை ஆளுங்கட்சியினரின் தனி ராஜ்ஜியங்களாக மாற்ற நடக்கும் முயற்சிகள், இந்த அமைப்புகள் எந்த அளவுக்கு முறையாகச் செயல்படும் என்ற கவலையை அளிக்கின்றன. சரியான திட்டங் களை அறிவித்துள்ள அரசு, அவை சீராகச் செயல்பட, கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு இயங்குவதையும் உறுதிப்படுத்துமானால் அது பல மடங்கு பாராட்டைப் பெறும்.

Reliance has increased the rates for mobile calls

Reliance has increased the rates for mobile calls to  2 paise per second  from the present 1.5 paise  for both the CDMA and GSM pre-paid connections. Vodafone, Airtel , Idea Cellular and Tata Teleservices have already raised the rates to 2 paise months back. The charges are being increased, according to the companies, to avoid losses. Within no time, all private players may increase the rates. Now that they have about 86% of the market share together, they need not be worried, while increasing rates.

Such more moves are expected in the future. If the PSUs, BSNL and MTNL were in a better position, these private companies would never have dared to increase the rates. BSNL and MTNL continues with the 1 paise per one second.
29/05/2013    o7.00AM   Tirunelveli



We are sorry to inform our dis. org.secretary com. SANKARAGURU, TTA. VLO. Eepired 0n 29/05/2013. Morning.

FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS
தமி மாநில
நா
:30-05-2013
அ ைம ேதாழ கேள,
வண க , தமி மாநில Forum of BSNL Unions/Associations ட SNEA தைலவ ேதாழ .
"#தரகி %ண& தைலைமய() நைடெப,ற.. 78.2%IDA இைண0ைப உடன3யாக BSNL
ஊழிய க5 6 ெப,றிட அகில இ#திய அைம07 05-06-2013 அ&8 அைன . மாவ ட9கள:;
தா ணா ேபாரா ட ைத< 12-06-2013 =த) காைலவைரய,ற ேவைல நி8 த ைத< நட திட
அைற வ) வ( >
ள..
தமிழக தி) இ#த இய க9கைள ெவ,றிகரமாக நட திட வ(வாதி க0ப > கீ க@ட
=3Aக
 ஏகமனதாக எ> க0ப ட..
1) மாநில அளவ() அைன . மாநில ெசயல க5 இைண#. ",றறி ைக ெவள:ய(>வ.,
2) அைன . மாவ ட9கள:5 05-06-2013 தா ணாைவ மிகA ச தியாக நட .வ..
3) ேவைல நி8 த ைத ெவ,றிகரமா கிட மாவ ட அளவ() அைன . ச9க தைலவ க5
இைண#. ஊழிய ச#தி07 இய க ைத ஜு& 11-2013 வைர நட .வ..
4) தமி மாநில =Jவ. அைன . மாவ ட9கள:; ேவைலநி8 த வ(ள க
ட ைத இைண#. 10-06-2013 அ&8 நட .வ. . மாநிலKச9க தைலவ கைள
வாL07
ள இட9கள:) இ ட9கள:) பய&ப> தி ெகா
ள ேவ@>கிேறா
ேதாழைம<ட&, மாநிலKெசயல க
.
S.ெச)ல0பா R.ப டாப(ராம& M.ேகாப(நாத&
BSNLEU NFTE(BSNL) SNEA
N.வரM பா@3ய& A.ெச)லபா@3ய& P.N.ெப மா

AIBSNLEA TEPU SEWABSNL

Monday 27 May 2013

CAG is only an accountant.” – Kapil Sibal.
An angry Kapil Sibal has stated that the Comptroller and Auditor General was only an accountant and he cannot criticize the 2G auctioning. Vinod Rai, CAG, who retired recently, had become a crusader in the fight against corruption. He had recently stated that the 2G auctioning conducted by the govt., last year was destroyed by the private mobile companies by forming a cartel among themselves. Kapil Sibla became very furious due to this and has said that the CAG ultimately was only an accountant and that be could not comment about the auction conducted by the government. Now, the question is, why Kapil Sibal should become so angry on Vinod Rai?  The CAG has only criticized the private telecom companies, and not the government or the minister. Is it because of the love that Kapil Sibla is having for the private companies? Or is it because Vinod Rai exposed the massive scams of the UPA govt., like the 2G, Coal Gate, Commonwealth, etc.?

 thanks to bsnleuchq.com
BSNL added 2.9 lakh new customers, while all major private companies lost their customers sizeably, during October to December 2012.
According to the TRAI report, BSNL gained 2.9 lakh new customers during the period from October to December 2012. During the same period, all major private operators lost lakhs of their customers. As a result the market share of BSNL increased from 10.99% in September 2012 to 11.56% in December 2012.
Number of customers lost by private operators from September 2012 to December 2012-

Reliance                   -           16.32 million
Tata Tele Services -           8.80   million
Vodafone                 -           5.19    million
Airtel                         -           4.02   million
Aircel                         -           3.26   million
Sistema Shyam       -           1.71   million
Idea                            -           1.52   million

Wednesday 22 May 2013


BSNL EMPLOYEES UNION
Recognised Union in BSNL
(Regiistered Under IIndiian Trade Uniion Act 1926.. Regn..No..4896)
CHQ:Dada Ghosh Bhawan, Opp. Shadipur Bus Depot., New Delhi – 110008
Email: chqbsnleu@sify.com, website: bsnleuchq.com
P.. Abhiimanyu Phone:: ((O)) 011--25705385
Generall Secrettary Fax:: 011-- 25894862
BSNLEU/ 510 (T&P) 21.05.2013
To
Shri A.N. Rai,
Director (HR), BSNL,
Bharat Sanchar Bhawan,
Janpath, New Delhi – 110 001
Sir,
Sub: - Requesting to reduce the qualifying service for applying transfer out of the SSA / Circle- reg.
Ref: - BSNL letter no.6-01/2007-Restg. dated 06-09-2007.
BSNL has implemented Transfer Policy for the Non- Executives, which was circulated vide letter cited under reference.
According to para 11 (a) of the said Transfer Policy, the request for transfer of a Non-Executive will be considered only
after the official completes 5 years of service in that SSA/circle. Experience of the implementation of the Transfer Policy
during the past 5 years, has shown that this conditionality is creating much hardship to the employees.
Non-Executives, especially the Direct Recruited TTAs, who are posted in faraway circles, are suffering much due to the
condition stipulated in para11 (a) of the Transfer Policy. In many cases, the aged parents of these officials are critically ill.
Still such officials cannot get transfer to their native circles before completion of the 5 year period. In the case of
unmarried women employees, the situation is worse. Since they are posted faraway from their families, finalization of
their marriage becomes impossible. This Union has come across a number of such cases during the past few years.
Hence, this issue needs to be revisited by the Management, with a humanitarian approach. We demand that the 5 year
condition, stipulated in para11 (a) of the Transfer Policy may reduced to 2 years, so as to give the much required relief to
the officials posted in far off circles. At present, BSNL is in the process of recruiting 2600 TTAs through the open market.
It is requested that after recruitment, these TTAs may be utilised to relieve those who have already completed 2 years of
service and who are badly in need of transfer to their home circles.
Since this is a burning staff problem, I request you to kindly look into it and to implement the proposal of the Union.
Thanking you,
Yours siincerelly
(P. Abhimanyu)
General Secretary
Copy to: (1) The GM (Restructuring), BSNL CO, New Delhi – 110001
(2) The GM (Estt.), BSNL CO, New Delhi – 110001
(3) The GM (SR), BSNL CO, New Delhi – 110001

Saturday 18 May 2013



 சரிபார்ப்பு தேர்தலில் தொடர்ந்து 5 வது  முறையாக வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்த BSNLEU சங்கத்தின் மாநிலம் தழுவிய வெற்றி விழா 04-06-2013 அன்று கோயம்புத்தூர் தொலை பேசி நிலைய வளாகத்தில் மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது .நமது மாவட்ட தோழர்கள் ,தோழியர்கள் அனைவரும் பெரும் திரளாய் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .


          78.2% IDA இணைப்பு விசயத்தில் BRPSE அமைப்பின் செயலர் கூறுகையில் தொலை தொடர்பு துறை 78,2% .IDA இணைப்பு பிரச்சினை விசயமாக BRPSE அமைப்பிடம் கலந்து ஆலோசிக்க தேவையில்லை என கூறியுள்ளார்.மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் ஒரு "நலிவடைந்த " பொதுத்துறை நிறுவனம் ஆக அறிவிக்கப்படவில்லை ஆதலால் தொலை தொடர்பு துறை இவ் விஷயம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தானே செய்யலாம் என செயலாளர், BRPSE அவர்கள் கூறியுள்ளார் .டாட் திட்டமிட்டு 78.2% IDA இணைப்பை காலதாமதம் செய்வதை எதிர்த்து 12-06-2013 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் .